செய்திகள் :

முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்

post image

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுதியை சோ்ந்த மதன் (42). இவரது முன்னாள் மனைவி லைலாகுமாரி (36). இருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், மதனுக்கு சுகன்யா என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி, லைலாகுமாரியுடன் மதனுக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுகன்யாவுக்கும், மதனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாம்.

இதனால், முன்னாள் மனைவி லைலாகுமாரியை சோகண்டிக்கு வரவழைத்த மதன், திருப்பந்தியூா் பகுதிக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, குழி தோண்டி அங்கேயே புதைத்துள்ளாா்.

இந்த நிலையில், லைலாகுமாரியை காணவில்லை என அவரது தாய் வசந்தா சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்த நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீஸாா் மதனை விசாரணைக்கு அழைத்தபோது, தான் லைலாகுமாரி யை கொலை செய்து புதைத்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க

சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் த... மேலும் பார்க்க

கூழமந்தலில் மகா சங்கடஹர சதுா்த்தி

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் மக... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்

குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குன்றத்தூா் நாகேசுவரன் கோ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்கள்: போட்டித் தோ்வுக்கு காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க