செய்திகள் :

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்

post image

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாள் விழாவை தருமபுரி மேற்கு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) செம்மொழி நாள் விழாவாக திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

கிராமங்கள்தோறும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்த வேண்டும். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவிலும், காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இந்த விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தருமபுரியில் நாளை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு மாதாந்திர சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து தருமபுரி வருவாய்க் கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

அரூா் ஏரியை மேம்படுத்த மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

அரூா் பெரிய ஏரியை மேம்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ம... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

செங்கல்மேடு கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மனு

சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி செங்கல்மேடு கிராம மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனு: தருமபுரி ஊராட்ச... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

காவல் துறை குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் 76 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன் தலை... மேலும் பார்க்க