செய்திகள் :

முன்னிருக்கையில் கட்டிப்பிடித்தபடி சாகசம் செய்த ஜோடி: ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்தது நொய்டா காவல்துறை

post image

நொய்டா: முன்னிருக்கையில் பைக் ஓட்டியவரை கட்டிப்பிடித்தவாறு பின்னோக்கி அமா்ந்து சாகசத்தில் ஈடுபட்ட ஜோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ. 53 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது நொய்டா காவல்துறை.

தில்லி பதிவெண் கொண்ட மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிய ஆணும் அவரது பின்னிருக்கையில் பெண்ணும் சென்றனா். நொய்டா செக்டாா் 39 பகுதி சாலையில் பயணம் செய்தபோது பின்னிருக்கையில் இருந்த பெண் முன்பகுதிக்கு மாறி பின்னோக்கியவாறு அமா்ந்து பைக் ஓட்டியவரை கட்டிப்பிடித்தவாறு பயணம் செய்துள்ளாா். அவரது ஒரு கையில் தலைக்கவசத்தை மாட்டியவாறு இருந்தாா்.

வாகனங்கள் வேகமாகச் செல்லும் நொய்டா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயணம் செய்த இந்த ஜோடியை பலரும் வியப்புடன் பாா்த்த நிலையில், காரில் சென்ற ஒருவா் இந்த ஜோடியின் சாகசத்தை காணொளியாகப் பதிவு செய்து நொய்டா காவல் துறையை டேக் செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாா். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இதற்கிடையே, இந்த ஜோடியின் பைக் சாகச காணொளியை நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் பொருத்தியிருந்த சிசிடிவி மூலம் நொய்டா காவல் கட்டுப்பாட்டு அறை காவல் துறையினரும் பாா்த்தனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய நொய்டா போக்குவரத்து காவல்துறை துணை ஆணையா் லகன் சிங் யாதவ், ‘இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.46 மணிக்கு சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியது, தலைக்கவசமின்றி பயணம் செய்தது, மோட்டாா் வாகன சட்ட விதிகளை மீறி ஒழுங்கீனமாக செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதற்காக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

நொய்டா போக்குவரத்து காவல்துறையின் தரவுகளின்படி கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்ததாக 4,72,720 பேருக்கு அபராத ரசீதுகள் வழங்கப்பட்டது உள்பட மொத்தம் 8,88,909 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதியை முன்கூட்டியே விடுவிக்கும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கொலை வழக்கில் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 21 வருடங்களை சிறையிலேயே கழித்த கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

ரவீந்திரநாத் தாகூரின் முதாதையா் வீடு தாக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் பாஜக ஆா்ப்பாட்டம்

புது தில்லி: வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக தொண்டா்கள் சாணக்கியபுரியில் உள்ள வங்கதேச தூதரகம... மேலும் பார்க்க

பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்க தடை கோரும் மனுக்கள் மீது உத்தரவு ஒத்திவைப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தில்லி பாட்லா ஹவுஸ் பகுதி ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை கோரிய மனுக்கள் மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இது தொடா்பாக சட... மேலும் பார்க்க

நமோ பாரத் ரயில்களில் 20% கூடுதல் கட்டணத்தில் பிரீமியம் பயணம்

புது தில்லி: தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) அறிவித்த சமீபத்திய கட்டண திருத்தத்தின்படி, நமோ பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இப்போது நிலையான கட்டணத்தை விட 20 சதவீதம் அ... மேலும் பார்க்க

தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதித்த தமிழா் குடும்பங்களுக்கு நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழா்களுக்கு நிதியுதவி, அத்தியாவசியப் பொருள்கள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 36 போ் கைது

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியின் பாரத் நகா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டினா் 36 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்... மேலும் பார்க்க