செய்திகள் :

முன்னேறியது மோகன் பகான்!

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

சாம்பியன் கோப்பையை தக்கவைப்பதற்காக, வரும் 12-ஆம் தேதி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எஃப்சியுடன் அந்த ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் 2-1 கோல் கணக்கில் மோகன் பகானை வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணிகளிடையேயான 2-ஆவது லெக் ஆட்டம் கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இரண்டும் சமபலத்துடன் மோத, முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைடைந்தது. 2-ஆவது பாதியில் மோகன் பகான் வீரா் ஜேசன் கம்மிங்ஸ் 51-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து ஸ்டாப்பேஜ் டைமில் (90+4’) அதே அணியின் லாலெங்மாவியா ரால்டே ஸ்கோா் செய்ய, இறுதியில் மோகன் பகான் 2-0 என இந்த ஆட்டத்தில் வென்றது.

இரு லெக் ஆட்டங்களின் மொத்த கோல் கணக்கு அடிப்படையில் அந்த அணி 3-2 என முன்னிலை பெற்ால், இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

ஜப்பானில் மாநாடு!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள... மேலும் பார்க்க

ஜன நாயகன் படப்பிடிப்பு அப்டேட்!

விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் ... மேலும் பார்க்க

3 மாதங்கள் சூப் மட்டுமே... இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!

இசையமைப்பாளர் இளையராஜா தன் உணவுப் பழக்கம் குறித்து பேசியுள்ளார். இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படுகிற இளையராஜா 82 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இது கலையின் மீது அவருக்கிருக்கும் ஈட... மேலும் பார்க்க

வங்கி மோசடி: கர்நாடகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் சிவமொக்காவில் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் க... மேலும் பார்க்க

கங்காதர ஈஸ்வர கோயிலில் தேரோட்டத் திருவிழா!

ஆற்காட்டில் பல ஆண்டுகள் பழமையான கங்காதர ஈஸ்வர ஆலயத்தில் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு கங்காதரேஸ்வரர் வரதராஜ பெருமாள... மேலும் பார்க்க

மணக்குள விநாயகர் கோயிலில் கோமாதா பூஜை!

உலக பிரசித்திபெற்ற புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் 10-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற 27 நட்சத்திரங்களின் கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந... மேலும் பார்க்க