செய்திகள் :

உச்ச நீதிமன்ற தீர்ப்பு : `பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் விடுவிப்பு’ - வழக்கறிஞர் வில்சன்

post image

தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையே மோதல் நிலவி வந்தது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. ஆனால் இதை ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்றுக்கொள்ளவில்லை. அதை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பவில்லை.

அதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்தார்.

ஆளுநர் ரவி | உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில்தான், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

சட்டவிரோதமானது

அந்த தீர்ப்பில், ``ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்டவிரோதமானது" எனக் குறிப்பிட்டு, சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வழக்கறிஞர் வில்சன், ``அரசு தரப்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கலுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றமே அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து, அந்த மசோதாக்கள் இன்று முதல் அமலுக்கு வரும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், எந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையோ அந்த மசோதாக்களைதான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதையும், மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் இனி பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்பட முடியாது. இன்றிலிருந்து அவர் அந்தப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்." என்றார்.

சிபிஎம் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி; கண்டித்த காங்., நிர்வாகியான கணவர்

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் திவ்யா எஸ் அய்யர், கேரள மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உள்ளார். பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றிய அவர் இப்போது விழிஞ்ஞம் துறைமுக மேலான்மை இயக்குநராக ப... மேலும் பார்க்க

`பாஜக இளைஞரணி தயாராக இருக்க வேண்டும்..!' - மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சியின் 13வது மாநிலத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன். மேள தாளங்கள் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட... மேலும் பார்க்க

தென்காசி: பள்ளி படிக்கட்டுக்கு நடுவே புதைக்கப்பட்ட மின்கம்பி - அதிகாரிகள் அலட்சியத்தால் அச்சம்!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக சுமார் 17.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்ப... மேலும் பார்க்க

டெல்லி: வகுப்பறையில் சாணம் பூசிய கல்லூரி முதல்வர்; பதிலுக்கு மாணவர் சங்க தலைவர் செய்த செயல்!

டெல்லியில் உள்ள லக்‌ஷ்மி பாய் கல்லூரியின் முதல்வர் வகுப்பறையில் மாட்டு சாணம் பூசிய வீடியோ வைரலானது. அவரது செயலுக்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் ரோனக் காத்ரி எதிர்வினை ஆற்றியுள்ளது முக்க... மேலும் பார்க்க

'தமிழக அரசிடமிருந்து ஊதியம் வேண்டாம்'- மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தலைவர் குரியன் ஜோசப்

மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று தெரிவித்திருகிறார். ஸ்டாலின்சட்... மேலும் பார்க்க