செய்திகள் :

தென்காசி: பள்ளி படிக்கட்டுக்கு நடுவே புதைக்கப்பட்ட மின்கம்பி - அதிகாரிகள் அலட்சியத்தால் அச்சம்!

post image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக சுமார் 17.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு அருகே உள்ள காலியிடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கூடுதல் வகுப்பறை புதிய கட்டடத்துக்கு நடுவே மின்கம்பத்தின் 'ஸ்டே ஒயர்' புதையும்படி பள்ளிக்கட்டட பணிகள் முடிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மின்கம்பி
படிக்கட்டு நடுவே..

இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கையில், "பள்ளியின் புதிய கட்டட பணிகள் நிறைவுபெற்று கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படவில்லை. முன்னதாக, வகுப்பறை கட்டட பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதம் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதன்பிறகு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் பள்ளி கட்டடத்தின் படிக்கட்டுகளில் மின்கம்பத்தின் 'ஸ்டே ஒயர்' செல்லும்படி புதைத்து கட்டடம் கட்டப்பட்டிருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. பள்ளிக் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டுள்ளதை அதிகாரிகள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என‌ புரியவில்லை. இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

தொடர்ந்து பள்ளி தரப்பில் பேசியவர்கள், "ஸ்டே ஒயர் மற்றும் மின்கம்பத்தை அகற்றுவதற்கு ஊராட்சி சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. பணிகளை உடனடியாக தொடங்கி சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க

`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், ... மேலும் பார்க்க

'லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை பயன்படுத்தி, 4000 கிலோ ராக்கெட் செலுத்தும் திட்டம்' - இஸ்ரோ தலைவர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இஸ்ரோவில் 2025-ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்... மேலும் பார்க்க

`அரசியலமைப்பு தான் அனைத்திற்கும் பிரதானம்..!' - துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா கண்டனம்

"அரசியல் சாசனப் பிரிவு 142, ஜனநாயக சக்தியின் மீது நீதித்துறை தொடுக்கும் அணு ஏவுகணையாக மாறிவிட்டது. இது 24x7 செயல்பட்டு வருகிறது. ஒரு ஜனாதிபதியை உத்தரவிடும் சூழ்நிலையை நாம் ஏற்றுகொள்ள முடியாது. அரசியலம... மேலும் பார்க்க

அதிமுக: "தலைமையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்காதீர்கள்" - கட்சியினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்

தலைமையின் அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது..."கழக ந... மேலும் பார்க்க