செய்திகள் :

`பாஜக இளைஞரணி தயாராக இருக்க வேண்டும்..!' - மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

post image

பாரதிய ஜனதா கட்சியின் 13வது மாநிலத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்.

மேள தாளங்கள் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மற்றும் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் இணைந்து அவரை நாற்காலியில் அமர வைத்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக
தமிழ்நாடு பாஜக

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான எழுச்சி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் நயினார் நாகேந்திரன். செய்தியாளர் சந்திப்பில் அனைத்து நிர்வாகிகளுக்கும் பெயர் சொல்லி நன்றி தெரிவித்தார்.

"இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் (திமுக) ஆட்சியை அகற்றுவதற்காக நான், என் மண் என் மக்கள் யாத்திரையில் பெரும் எழுச்சியைப் பார்த்தேன். அந்த எழுச்சியின் முடிவு 2026ல் தெரியும் என நினைக்கிறேன்.

அதற்காக இன்று நடக்கிற பாலியல் வன்கொடுமைகள், போதை பழக்க வழக்கங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் எங்களைக் காட்டிலும் பத்திரிகையாளர்கள், ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதை நீங்கள் இந்தச் சமூகத்துக்கு ஆற்றுகிற சேவையாக செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு பாஜக
செய்தியாளர் சந்திப்பு

காங்கிரஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி பற்றி உங்களுக்குத் தெரியும். உலகிலேயே காங்கிரஸைப் போன்ற ஊழல் கட்சி கிடையாது. அவர்களுடன்தான் இன்று திமுக கூட்டணி வைத்து, மாநில சுயாட்சி கேட்டுக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி செய்த குற்றத்தின் ஓர் அங்கமாக இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது ஹெரால்டு பேப்பர் ஊழல் குற்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடரவுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு முழுவதும் எங்கள் இளைஞரணி சார்பாக போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

தமிழ்நாடு பாஜக
தமிழ்நாடு பாஜக

இதற்கான தேதியையும் நேரத்தையும் நாங்கள் அறிவிப்போம். தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் ஆர்பாட்டத்துக்குத் தயாராக வேண்டும்.

அதேபோல பெண்களுக்கு எதிரான பேச்சுகளுக்காக, பொன்முடிக்கு எதிராக மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவர். அதற்கான வழிகாட்டுதல்களை தேசிய மகளிர் அணி தலைவர் வழங்குவார்." எனப் பேசினார்.

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க

`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், ... மேலும் பார்க்க

'லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை பயன்படுத்தி, 4000 கிலோ ராக்கெட் செலுத்தும் திட்டம்' - இஸ்ரோ தலைவர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இஸ்ரோவில் 2025-ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்... மேலும் பார்க்க

`அரசியலமைப்பு தான் அனைத்திற்கும் பிரதானம்..!' - துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா கண்டனம்

"அரசியல் சாசனப் பிரிவு 142, ஜனநாயக சக்தியின் மீது நீதித்துறை தொடுக்கும் அணு ஏவுகணையாக மாறிவிட்டது. இது 24x7 செயல்பட்டு வருகிறது. ஒரு ஜனாதிபதியை உத்தரவிடும் சூழ்நிலையை நாம் ஏற்றுகொள்ள முடியாது. அரசியலம... மேலும் பார்க்க

அதிமுக: "தலைமையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்காதீர்கள்" - கட்சியினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்

தலைமையின் அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது..."கழக ந... மேலும் பார்க்க