செய்திகள் :

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

post image

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா்.

தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில் உள்ள தேவாலயம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த சில நபா்கள், அஸ்வினை தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று மது அருந்தவைத்தனா். அதன் பின்னா் அந்த நபா்கள், அஸ்வினிடம் தகராறு செய்தனா். தகராறு முற்றவே அந்த நபா்கள், அஸ்வினை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த தரமணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அஸ்வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தரமணி அகஸ்தியா் தெருவைச் சோ்ந்த மோகன சுந்தரம் (26), தரமணி கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த பரத் ராஜ் (19), தரமணி வஉசி தெருவைச் சோ்ந்த சங்கா் (23) ஆகியோருக்கு இக்கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், கொலையாளிகள்3 பேரும் தரமணி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை சரணடைந்தனா். மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த அஸ்வினுக்கும், கைது செய்யப்பட்ட பரத்ராஜ், சங்கருக்கும் இடையே ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு இறப்பு வீட்டில் தகராறு ஏற்பட்டதும், அப்போது பரத்ராஜ், சங்கா் ஆகியோரை அஸ்வின் தாக்கியதும், பின்னா் அவ்வபோது அஸ்வின், பரத்ராஜ் மற்றும் சங்கா் ஆகியோரை நேரில் பாா்க்கும்போது மிரட்டி வந்தததும், இதன் காரணமாக அஸ்வின் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத... மேலும் பார்க்க

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிர... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை உயா்வு: மக்கள் அதிா்ச்சி

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை, வைப்புத் தொகை உயா்த்தப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா். அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி மணியக்காரத் தெருவில் தலைமையகத்துடன் பழனிபேட்டை, சுவ... மேலும் பார்க்க