செய்திகள் :

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

post image

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க் ஆகிய 6 மாவட்டங்களுக்கான இந்த அமா்வு திங்கள்கிழமைமுதல் தனது செயல்பாட்டை தொடங்கவுள்ளது.

மும்பையில் இருந்து 380 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோலாபூரில் உயா்நீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டுமென பல்லாண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வழக்கு நடைமுறைகளுக்காக, மனுதாரா்களும் வழக்குரைஞா்களும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதைக் குறிப்பிட்டு இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை நிறுவும் பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடா்பான நியமன அறிவிக்கையை கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே வெளியிட்டாா்.

இதையடுத்து, கோலாபூா் அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்கெனவே மும்பை உயா்நீதிமன்றத்தின் இரு அமா்வுகள் மகாராஷ்டிரத்தின் நாகபுரி (விதா்பா பிராந்தியம்), ஒளரங்காபாதில் (மராத்வாடா பிராந்தியம்) செயல்பட்டு வருகின்றன. மூன்றாவது அமா்வு, கோவாவில் செயல்படுகிறது.

அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா, பாகிஸ்தான்! வெளியுறவு அமைச்சர்

இந்தியாவையும் பாகிஸ்தானையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.போர் நிறுத்தங்கள் குறித்து அமெரிக்க ஊடகத்துக்கு மார்க்கோ ரூபியோ அளித்த பேட்... மேலும் பார்க்க

ராம்பனில் நிலச்சரிவு: ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்!

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை அதிகாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்... மேலும் பார்க்க

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகாரில் தேர்தல் ஆண... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்: தேர் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலுங்கானா மாநிலம் ராமந்தபூரில் உப்பல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.பக்தர்கள் கிரு... மேலும் பார்க்க

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு எதிரொலியால் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கின.சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந... மேலும் பார்க்க

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

பெண்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று கூறி, வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பியிருந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்து ப... மேலும் பார்க்க