செய்திகள் :

மும்பை: 1200 அடி பள்ளத்தாக்கில் பிணமாகக் கிடந்த பெங்களூரு பேராசிரியர்; தீவிர விசாரணையில் போலீஸ்

post image

பெங்களூருவில் பேராசிரியராக இருந்தவர் சண்முக பால சுப்ரமணியம் (58). இவர் சிறந்த பேச்சாளர் ஆவார். நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக நடத்தும் கருத்தரங்குகளில் பேச்சாளராக இவரை அழைத்துப் பேச வைப்பது வழக்கம்.

மும்பையில் அது போன்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக பாலசுப்ரமணியம் வந்திருந்தார். அவர் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். ஆனால் கம்பெனி சார்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்ற பாலசுப்ரமணியம் செல்லவில்லை. இதையடுத்து அவர் எங்கே சென்றார் என்று அவரை மும்பைக்கு வரவழைத்த கம்பெனி விசாரிக்க ஆரம்பித்தது.

அவர் தங்கி இருந்த ஹோட்டலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர் ஹோட்டலில் இருந்து கிளம்பி சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரைப் பற்றி போலீஸில் புகார் செய்யப்பட்டது.

சடலம்
சடலம்

போலீஸார் சோசியல் மீடியா மூலம் அவரைப் பற்றி தகவல் கொடுத்து அவர் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அதோடு அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்தபோது மும்பையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாதேரான் மலைப்பகுதியில் அவரது மொபைல் போன் சிக்னல் காட்டியது.

அதோடு பாலசுப்ரமணியம் குடும்பத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் உடனே மும்பைக்கு வந்தனர். போலீஸாரும், பாலசுப்ரமணியம் குடும்பத்தினரும் மாதேரான் மலைப்பகுதிக்குச் சென்று தேட ஆரம்பித்தனர். அவரது உடல் மலை பள்ளத்தாக்கில் 1200 அடியில் கிடப்பதை உள்ளூர் பழங்குடியினர் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் உடனே லோனவாலாவில் இருந்து மலையேற்ற குழுவினரை வரவழைத்து கயிறு கட்டி அவரது உடலை மேலே கொண்டு வந்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் கீழே விழுந்தபோது உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மலையில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அவர் அப்பகுதிக்கு வரும்போது அவரை யாராவது பார்த்தார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி: இரட்டை கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு; கர்ப்பிணி காதலியைக் குத்திக்கொன்ற இளைஞர்

டெல்லி ராம் நகரில் வசித்து வருபவர் ஆகாஷ். இவரது மனைவி சாலினி ஆட்டோ டிரைவர். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. சாலினிக்கு சைலேந்திரா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்தது.தற்போது ச... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "அண்ணனின் சிகிச்சைக்கு பணம் தேவை" - சொந்த வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மகாவிர்ஜி நகரில் வசித்து வருபவர் மியூஷ் மித்தல். துணி வியாபாரியான மித்தல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூஜா (32) என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.கடந்... மேலும் பார்க்க

``நான் யாரு தெரியுமா? என் அப்பா கலெக்டர் பி.ஏ!'' - மது போதையில் தகராறு; சம்பவம் செய்த கடலூர் எஸ்.பி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக, நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ... மேலும் பார்க்க

Louvre Museum: `விலைமதிப்பற்ற' நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?

உலகிலேயே மதிப்புமிக்க வரலாற்றுக் கலைப்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் பாரிஸில் உள்ள லூவர். மோனா லிசா போன்ற அதீத முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் இங்கு உயர் தொழில்நுட்ப கண்காணிப்பில் உள்ளன. இங்கிருந்... மேலும் பார்க்க

`ஆன்லைனில் மது ஆர்டர்' - ரூ. 7 லட்சத்தை இழந்த சினிமா நிறுவனம்; சைபர் கிரைம் மோசடி

இப்போதெல்லாம் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை ஆன்லைனில் வாங்குவது அதிகரித்து இருக்கிறது. ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, சைபர் கிரிமினல்களால் பலர் தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர்... மேலும் பார்க்க

சீனா டு தூத்துக்குடி; துறைமுகத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சீன `பைப்' பட்டாசுகள் -விவரம் என்ன?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா என, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையி... மேலும் பார்க்க