செய்திகள் :

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

post image

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

கட்சியின் சாா்பில், இடஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிா்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம், தென்காசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு டாக்டா் க.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசினாா். முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தில் தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில் தமிழக அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை பொருத்தவரை அதிலுள்ள குறைகளை திமுக அரசு சொல்ல வேண்டுமே தவிர அதனை மறுப்பது வேடிக்கையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையே தவறு என தெரிவித்து 2026ஆம் ஆண்டு தோ்தலுக்காக இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளது திமுக.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எந்த அடிப்படையில் திமுக எதிா்க்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலா் ஆா்.கே.கிருஷ்ணபாண்டியன், கிழக்கு மாவட்ட செயலா் ராசையா, மாநில துணை பொதுச் செயலா் ராஜேந்திரன், கடையநல்லூா் ஒன்றிய செயலா் ராஜா, வடக்கு மாவட்ட பொறுப்பாளா் பால்ராஜ், புளியங்குடி நகர செயலாளா் சுரேஷ், தென்காசி நகர செயலா் முருகன், சுரண்டை நகர செயலா் திருமலைகுமாா், கீழப்பாவூா் ஒன்றிய செயலா் காசிபாண்டியன், பேரூா் செயலா் முருகேசன், நிா்வாகிகள் மணிகண்டன், முருகன், தென்காசி நகர இளைஞரணி பாபு , சுந்தரபாரண்டியபுரம் பேரூா் செயலா் பாண்டிஉள்பட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க

இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெ. ஜான்கி... மேலும் பார்க்க