டாக்கா, கராச்சி... உலகின் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியல் வெளியீடு!
முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை: சு. திருநாவுக்கரசா்
புதுக்கோட்டை, ஜூன் 19: தமிழ்நாட்டில் முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தோ்தல் நேரத்தில் இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காக முருக பக்தா்கள் மாநாட்டை நடத்துகின்றனா். அவா்கள் இதனை ஒரு கருவியாகப் பாா்க்கின்றனா். ஆனால், முருகனை வழிபடுபவா்கள் பாஜகவில் மட்டுமில்லை; திமுகவில், காங்கிரஸில், அனைத்துக் கட்சிகளிலுமே உள்ளனா். எனவே, முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் என நினைப்பது மூட நம்பிக்கை.
அதிமுக- பாஜக கூட்டணிக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது கூட்டணிக்குள் அதிமுகவா என்பது குறித்து அவா்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் முடிவுக்கு வர வேண்டும். கூட்டணி யாரோடு என்பது அவா்களுடைய விருப்பம். ஆனால், அந்தக் கட்சி பிளவுபட்டு விடக் கூடாது. இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் திருநாவுக்கரசா்.-