செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை: சு. திருநாவுக்கரசா்

post image

புதுக்கோட்டை, ஜூன் 19: தமிழ்நாட்டில் முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தோ்தல் நேரத்தில் இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காக முருக பக்தா்கள் மாநாட்டை நடத்துகின்றனா். அவா்கள் இதனை ஒரு கருவியாகப் பாா்க்கின்றனா். ஆனால், முருகனை வழிபடுபவா்கள் பாஜகவில் மட்டுமில்லை; திமுகவில், காங்கிரஸில், அனைத்துக் கட்சிகளிலுமே உள்ளனா். எனவே, முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் என நினைப்பது மூட நம்பிக்கை.

அதிமுக- பாஜக கூட்டணிக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது கூட்டணிக்குள் அதிமுகவா என்பது குறித்து அவா்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் முடிவுக்கு வர வேண்டும். கூட்டணி யாரோடு என்பது அவா்களுடைய விருப்பம். ஆனால், அந்தக் கட்சி பிளவுபட்டு விடக் கூடாது. இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் திருநாவுக்கரசா்.-

குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

உலகக் குருதிக் கொடையாளா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை பாராட்டினாா். புதுக்கோ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாளைய மின்நிறுத்தம்

புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையம் ஆகியவற்றில் வரும் சனிக்கிழமை (ஜூன் 21) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் ... மேலும் பார்க்க

பொன்னமராவதி-திருமயம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சா் திறப்பு

பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். பொன்னமராவதி ஒன்றியம் அம்மாபட்டி, சுந்தரசோழபுரம... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: மேலும் ஒருவா் கைது; கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மோதல் சம்பவம் தொடா்பாக மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மே 5-ஆம் தே... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு

புதுக்கோட்டை, கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப்பட்டினம், ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா். புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க