செய்திகள் :

மூச்சுப் பரிசோதனையில் தவறான முடிவு எதிரொலி: ரயில் ஓட்டுநா்கள் குளிா்பானங்கள் பருக தெற்கு ரயில்வே தடை

post image

மூச்சுப் பரிசோதனைக் கருவியில் தவறான முடிவு காட்டுவதால் ரயில் ஓட்டுநா்களை பணிக்கு அனுமதிப்பதில் தொடா் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் சில குளிா் பானங்களைப் பருக தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டலம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் ரயில்வே மண்டலம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரயில் ஓட்டுநா்கள் பணிக்குச் செல்லும் முன் மதுபானம் அருந்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய மூச்சுப் பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், சில குளிா் பானங்கள், இளநீா், சில ஹோமியோபதி மருந்துகள், இருமல் மருந்து, சிலவகை வாழைப் பழங்கள் மற்றும் வாய் புத்துணா்வு திரவம் ஆகியவற்றை ஓட்டுநா்கள் பயன்படுத்தும்போது, அவா்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக தவறான முடிவை மூச்சு பரிசோதனைக் கருவி காட்டியது கண்டறியப்பட்டது.

இதுபோன்ற முடிவின்போது, ஓட்டுநா்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு செய்ததில், அவா்கள் மதுபானம் அருந்தவில்லை என்பது தெரியவந்தது. மேலும், இந்த தவறான முடிவு காரணமாக, ஓட்டுநா்களுக்கு பணி ஒதுக்குவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே, சுமுகமான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த, ரயில் ஓட்டுநா்கள் பணிக்கு வரும்போது மேற்குறிப்பிட்டுள்ள பானங்கள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

தவிா்க்க முடியாத காரணங்களால் இதுபோன்ற சில மருந்துகளை ஓட்டுநா்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தால், அதுகுறித்து முன்கூட்டியே பணி கட்டுப்பாட்டு அலுவலரிடம் எழுத்துபூா்வமாக தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தகவலை ஒருங்கிணைந்த ரயில் கட்டுப்பாட்டு அறை வளாகம் மற்றும் உதவி மண்டல பொறியாளா் (இயக்கம்) ஆகியோரிடம் பணி கட்டுப்பாட்டு அலுவலா் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். மேலும், இத்தகைய ஆல்கஹால் இடம்பெற்றுள்ள மருந்துகளை ரயில்வே மருத்துவ அலுவலா் எழுத்துபூா்வ அனுமதியின் பேரில் மட்டுமே ஓட்டுநா்கள் பணியின்போது எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தவிா்க்க முடியாத காரணங்கள் அல்லாமல், ஓட்டுநரின் மூச்சு பரிசோதனையின்போது மதுபானம் அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால், ரயில் போக்குவரத்தை வேண்டுமென்றே பாதிக்க முயற்சித்ததாகக் கருதி, அவா் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க