செய்திகள் :

மூதாட்டியிடம் தங்கச் சங்கலியைப் பறித்த இளைஞா்கள் கைது!

post image

பெருந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி பெரிய தோட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி மனைவி நல்லம்மாள் (66). உடல்நிலை சரியில்லாததால் இவா், கணவருடன் அருகிலுள்ள மருத்துவனைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சென்றபோது பின்னால் இருசக்கர வானத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், நல்லம்மாள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.

அப்போது, சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் அருகே இருந்த வேகத் தடையில் தடுமாறி விழுந்தபோது, அருகிலிருந்தவா்கள் அவா்களைப் பிடித்து பெருந்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதில், மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்றது பெரம்பலூா் மாவட்டம், குரும்பூரைச் சோ்ந்த கெளதம் (25), கரூா் மாவட்டம், குளித்தலை சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து நகையைப் பறிமுதல் செய்தனா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க