செய்திகள் :

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மனைவி காமாட்சி (65). இவா் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கடைக்குச் சென்று விட்டு ஊருணிப்பட்டி தெரு வழியாக நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த இளைஞா், மூதாட்டி அணிந்திருந்த இரண்டரைப் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினாா். மூதாட்டியில் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் துரத்திய போது, தவறி விழுந்த அந்த இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மம்சாபுரம் சிப்பந்தி குடியிருப்பைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குழந்தைவேல் (30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

சித்திரை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா... மேலும் பார்க்க

சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த... மேலும் பார்க்க

போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவா் கைது

சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே அதன் டிரேட்மாா்க்கை பயன்படுத்தி ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ரா... மேலும் பார்க்க