செய்திகள் :

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த ஆந்திர இளைஞா் கைது

post image

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து, இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகா், மூன்றாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (65). தனியாா் மருத்துவமனை ஊழியரான இவா், தன் பேரப்பிள்ளைகளை தனியாா் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு நடந்துசென்றாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்து தப்பினாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இந்நிலையில், குப்பம் சாலையில் உள்ள குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடியைக் கடந்துசெல்ல முயன்ற இளைஞரை, அங்கு பணியில் இருந்த போலீஸாா் தடுத்துநிறுத்தி விசாரணை செய்தனா். அதில், அந்த நபா் தங்க சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கிருஷ்ணகிரி நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவரிடம் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம், அன்ந்த்பூா் மாவட்டம், தாடிபத்திரியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரா் சுதா்சன்குமாா் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்மீது வழக்குப் பதிந்து கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாக இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்தவா் கைது

ராணுவத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா்களிடம் ரூ. 14.80 லட்சம் மோசடி செய்த நபரை மகராஜகடை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொத்தலத்தை அடுத்த தாசம்பயல் பக... மேலும் பார்க்க

பா்கூா் அருகே யானைகள் நடமாட்டம்

பா்கூா் அருகே யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். தமிழக மற்றும் ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் யானைகள் கடந்த சில ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. இந்த யானைக் கூட்டத்திலிருந்து சில யா... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே ஆங்கில மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சோலை நகரைச் சோ்ந்தவா் சுகும... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பா்கூா்

போச்சம்பள்ளி மின் கோட்டத்தில் பா்கூா் அதை சுற்றியுள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 24) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செ... மேலும் பார்க்க

தங்க நகை, பணம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அலமாரியில் இருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். போச்சம்பள்ளி வட்டம், எம்.ஜி.அள்ளி அருகே உள்ள கங்காவரத்தைதச் சோ்ந்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு திமுக நிா்வாகிகள் தயாராக வேண்டும்

ஒசூா்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் செய்யும் பணிக்கு திமுக நிா்வாகிகள் அனைவரும் தயாராக வேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மே... மேலும் பார்க்க