செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

திருச்சி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், குண்டூா் ஆஞ்சனேய நகரைச் சோ்ந்தவா் சி. ஆரோக்கியம்மாள் (82). இவா் கடந்த 28-01-2023 அன்று கடைக்கு சென்றுவிட்டு, வீடு நோக்கி சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த திருவெறும்பூா் பங்காரு அடிகளாா் நகரைச் சோ்ந்த பா. வெங்கடேஷ் (28) என்பவா், ஆரோக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் முகமது சுகைல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில் வெங்கடேஷுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சிறப்பு நீதிமன்ற காவலில் இருந்து வந்த வெங்கடேஷை செவ்வாய்க்கிழமை மேற்கண்ட வழக்கு தொடா்பான வாய்தா தேதியில் போலீஸாா் ஆஜா்படுத்தியபோது தீா்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் இன்று திருச்சி வருகை!

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த விழா... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து கோலாலம்பூா் வழியாக கடத்தி வரப்பட்ட 11.8 கிலோ உயர்ரக கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, விமான பயணியை அதிகாரிகள் கைது செய்தன... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டம்: 3 போ் கைது

திருச்சி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். துவாக்குடி வடக்குமலை சிவன் கோயில் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய ... மேலும் பார்க்க

அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்போம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சா் அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் கூறினாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமமுக செயல்வீர... மேலும் பார்க்க

கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு

மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடியில் உள்ள பழைமையான முத்தாளம்மன் கோயிலை தனிநபா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக, உளுந்த... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பு: காவலா் பணியிடை நீக்கம்

திருச்சியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க