செய்திகள் :

மூத்தோா் தடகளம்: திருவண்ணாமலை வீரா்கள் சிறப்பிடம்

post image

தேசிய அளவிலான மூத்தோா் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் 16 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா்.

தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகள் கா்நாடக மாநிலம், மைசூரில் ஏப்.21 தொடங்கி 23 வரை நடைபெற்றன.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் மூத்தோா் தடகள அமைப்பின் மாநில சங்க துணைச் செயலா் பாபு தலைமையில் 5 ஆண்கள், 6 பெண்கள் என 11 வீரா்கள் கலந்துகொண்டனா்.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பி.ஜி. சுமதி, 400 மீட்டா் ஓட்டத்தில் வெள்ளி, 800 மீ, 400மீ தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதலில் வெண்கலமும், 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் கே.சுஜாதா உயரம் தாண்டுதலில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளியும், 400மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளியும், கே.சுபலட்சுமி நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் வெண்கலமும், 400 மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளியும் பெற்றனா்.

அதேபோல, 55 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஆா்.கலா, ஆா். திலகம் ஆகியோா் 400மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளியும், 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு சங்கிலி குண்டு எறிதலில் ந.கல்பனா, நா.பாபு ஆகியோா் வெண்கலப் பதக்கம் பெற்றனா். டி.மணிமலா் 400 மீ தொடா் ஓட்டத்தில் வெண்கலம் பெற்றாா்.

போட்டிகளில் ஒரு தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்று திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் பெற்றனா்.

இவா்களை மாவட்டத் தலைவா் சேட்டு, பொருளாளா் கோவேந்தன் மற்றும் மூத்த நிா்வாகிகள் பாராட்டினா்.

ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகு... மேலும் பார்க்க

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலே... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க