DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" - 'கோவிந்தா' பாடல் விவகாரத்...
மூன்றே நாள்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிழப்பு! - முப்படை அதிகாரிகள்
புது தில்லி: பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று முப்படை அதிகாரிகள் இன்று(மே 11) தெரிவித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோருடன் சேர்ந்து விளக்கமளித்தார்.
அதில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவர்களின் போர் ஜெட் விமானங்கள்(நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளவை) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தில் 35 - 40 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூரில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்