செய்திகள் :

மூலனூா் அருகே 1,550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

post image

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே ஆம்னி வேனில் கடத்திவரப்பட்ட 1,550 கிலோ ரேஷன் அரிசியை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூா்-வெள்ளக்கோவில் சாலையில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் குப்புராஜ் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக வேனை ஓட்டி வந்த மூலனூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (35) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,550 கிலோ ரேஷன்அரிசியையும் பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து நடத்திய விசாரணையில், கன்னிவாடி, மூலனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வடமாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆம்னி வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க