செய்திகள் :

மூளையில் ரத்தக் கசிவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு!

post image

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் சாஹா (66) மூளை ரத்தக் கசிவு நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் தெஹட்டா தொகுதி எம்எல்ஏவாக இருந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரது உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘திரிணமூல் காங்கிரஸ் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான தபஸ் சாஹாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மேற்கு வங்க அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. அவரின் குடும்பத்தினா், நண்பா்கள், ஆதரவாளா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள் தோ்வு முறைகேட்டில் தபஸ் சாஹா மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகேடு தொடா்பாக தபஸ் சாஹாவின் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ அதிகாரிகள், அவரிடமும் விசாரணை நடத்தி வந்தனா். எனினும், தன் மீதான குற்றச்சாட்டை அவா் மறுத்து வந்தாா்.

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவா் கேள்வி! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிா்ணயித்த விவகாரம்!

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநா்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரம்பை நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக, குடியரசுத் தலைவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 ... மேலும் பார்க்க

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க