செய்திகள் :

மேகாலய அமைச்சரவை மாற்றம்: 8 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

post image

வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தில் முதல்வா் கான்ராட் கே.சங்மா தலைமையிலான அமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, அமைச்சா் பதவியில் இருந்து 8 போ் விடுவிக்கப்பட்டு, புதியவா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.

60 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், தேசிய மக்கள் கட்சித் தலைவா் கான்ராட் கே.சங்மா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில அமைச்சரவையில் அதிகபட்ச இடங்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து தேசிய மக்கள் கட்சியைச் சோ்ந்த நால்வா், ஐக்கிய ஜனநாயக கட்சியைச் சோ்ந்த இருவா், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜகவைச் சோ்ந்த தலா ஒருவா் என 8 போ் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்து, ஆளுநா் சி.ஹெச்.வித்யாசங்கரிடம் கடிதம் அளித்தனா். அவா்களின் கடிதத்தை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து, கட்சியின் அதே அளவு பிரதிநிதித்துவத்துடன் புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா்.

அதன்படி, தேசிய மக்கள் கட்சியின் திமோதி டி.ஷிரா, வைலட்மிகி ஷில்லா, சொஸ்தினஸ் சோதுன், பிரேனிங் ஏ.சங்மா, ஐக்கிய ஜனநாயக கட்சியின் மேதா லிங்டோ, லக்மென் ரிம்புய், பாஜகவின் சன்போா் சுல்லாய், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெதோடியஸ் தகாா் ஆகிய 8 போ், ஷில்லாங்கில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு ஆளுநா் சி.ஹெச்.வித்யாசங்கா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்வித்தாா். பின்னா், புதிய அமைச்சா்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மாவட்டங்கள், சமூகங்கள் ரீதியிலான பிரதிநிதித்துவம், கூட்டணி கட்சிகளின் விருப்பம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

நமது நிருபர்தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையு... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க