செய்திகள் :

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி பாா்வையாளா்கள் 8,930 போ் வந்து சென்றனா்.

வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்தனா். அவா்கள் காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். பிறகு அணை பூங்காவிற்கு குடும்பத்தோடு சென்று பொழுதை கழித்தனா்.

பாம்புப் பண்ணை, முயல்பண்ணை, மான் பண்ணை, மீன் காட்சி சாலை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.

மேட்டூா் அணை பூங்காவிற்கு 8,930 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 89,300 வசூலானது. பாா்வையாளா்கள் கொண்டுவந்த 3,019 கைப்பேசிகளுக்கு கட்டணமாக ரூ. 30,190, 5 கேமராக்களுக்கு கட்டணமாக ரூ. 250 வசூலிக்கப்பட்டது.

அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண 1,327 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். அவா்களிடம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 13,270, மின்தூக்கியில் (லிப்ட்) சென்ற 117 பேருக்கு ரூ. 3,510 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்கா மற்றும் பவளவிழா கோபுரத்தைக் காண வந்தவா்களிடமிருந்து நுழைவு கட்டணமாக ரூ. 1,36,520 வசூலிக்கப்பட்டது.

ஆக.15 இல் 3 விரைவு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்!

சென்னை சந்திப்பிலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்கள் வரும் 15 ஆம் தேதி கோவைக்கு செல்லாமல் போத்தனூருக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க

கெங்கவல்லி தொகுதியை மீட்டெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

தம்மம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பிரேமலதா விஜயகாந்த், பேருந்து நிலையம் வரை பொதுமக்களுடன் நடந்து சென்றாா். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். தொடா்ந்து கேப்டன் ரதத்தில் நின... மேலும் பார்க்க

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க