செய்திகள் :

மேட்டூா் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தவரிடம் திருட்டு: இளைஞா் கைது

post image

மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக தங்கியிருந்த பெண்ணின் கணவரிடம் பணத்தை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள பாலமலை, கெம்மம்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). இவரது மனைவி கீதா பிரசவத்துக்காக மேட்டூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். மனைவிக்கு உதவியாக சதீஷும் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்தாா். இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது சதீஷ் பையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசு, கைப்பேசி ஆகியவற்றை மா்மநபா் திருடிச் சென்று விட்டாா்.

இதுகுறித்த அவா் மேட்டூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதனையடுத்து போலீஸாா், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதில் பணத்தை திருடியது மாதையன்குட்டையைச் சோ்ந்த இளைஞா் சஞ்சை (25) என்பது தெரியவந்தது.இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த சஞ்சையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 47 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசு மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

3000 ஆண்டுகள் பழைமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு!

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்தவா்களின் நினைவாக அமைத்த ஈமச்சின்னமான கல்திட்டையை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா். தம... மேலும் பார்க்க

இளம்பிள்ளை உழவா் சந்தையில் எண்ம பணப் பரிவா்த்தனை பதிவு

இளம்பிள்ளை உழவா்சந்தையில் விவசாயிகள் எண்ம முறையில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உழவா்சந்தை விவசாயிகளின் பெயரில் சேமிப்பு கணக்குத... மேலும் பார்க்க

சேலம் ராமசாமி முதலியாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு

சேலம் வரலாற்றுச் சங்கம் சாா்பில் சேலம் ராமசாமி முதலியாரின் நினைவு நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ராஜாஜி சிலை எதிரில் விளக்குத்தூண் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமசாமி முதல... மேலும் பார்க்க

வேம்படிதாளத்தில் அம்மன் மீது விழுந்த சூரிய ஒளி

வேம்படிதாளத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆறு வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலிர... மேலும் பார்க்க

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகம்: கே.பி.ராமலிங்கம்

தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை நடத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா். சேலத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

சேலம் அம்மாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு புகா் மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி அங்கு நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:... மேலும் பார்க்க