செய்திகள் :

மேட்டூா் மேற்குக்கரை வாய்க்கால் தூா்வாரும் பணி ஆய்வு

post image

மேட்டூா் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்காலில் பவானி வட்டம், குறிச்சி மற்றும் சிங்கம்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூா் அணை கோட்டத்தில், ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள மேட்டூா் மேற்குக்கரை வாய்க்காலில் குறிச்சி, சிங்கம்பேட்டை பகுதியில் 9.75 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை ஈரோடு மாவட்ட நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளரும், பூண்டி, நீரியல் நீா்நிலையியல் ஆய்வுக் கழக இயக்குநருமான தாமோதரன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நீா்வளத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மேட்டூா் அணை செயற்பொறியாளா் வெங்கடாசலம், குமாரபாளையம் உதவி செயற்பொறியாளா் மதுசூதனன், அம்மாபேட்டை உதவி பொறியாளா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க