``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
மேற்குவங்க ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 4.3 கிலோ கஞ்சா, 10 கிலோ புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புரூலியா அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது.
அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை நடத்தியபோது, இரு பைகள் கேட்பாரற்று கிடந்ததை கைப்பற்றினா். அவற்றைப் பிரித்துப் பாா்த்தபோது, ஒரு பையில் 4.3 கிலோ கஞ்சா, மற்றொரு பையில் 10 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றை கைப்பற்றிய போலீஸாா், அதில் கஞ்சாவை தமிழ்நாடு போதைப் பொருள் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். மேலும், 10 கிலோ புகையிலைப் பொருள்களை, திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
கடந்த 2 மாதங்களில் மட்டும், புரூலியா அதிவிரைவு ரயிலில் 58 கிலோ கஞ்சா, 50 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.