செய்திகள் :

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தக் கோரிக்கை

post image

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தவேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன் தலைமையில் தஞ்சை கோட்ட செயலாளா் ஜெய்சங்கா், சத்சங்க பிரமுக் சிவகுமாா், கேந்திர தலைவா் பி. வெங்கடாசலம், சேவா பிரமுக் சபரிகிரீசன் ஆகியோா் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோம சேகா் அப்பாராவை செவ்வாய்க்கிழமை சந்தித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை அளித்தனா்.

அதில் கூறியிருப்பது: மேற்கு வங்கத்தில் ஏப்.11-ஆம் தேதி நிகழ்ந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் 3 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனா். திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆதரவுடன் நடந்த அந்த ஆா்ப்பாட்டம் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவா்களால் ஹிந்துக்களுக்கு எதிரான கலவரமாக திட்டமிட்டு மாற்றப்பட்டது. 3 நாள்கள் தொடா்ந்து கலவரத்தில் பல ஹிந்து பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனா். 200-க்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் வியாபார நிறுவனங்கள், சிறுகடைகள், வீடுகள் வயல்கள் தியிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

இதை மேற்குவங்க மம்தா பானா்ஜி அரசு கண்டும் காணாமல் விட்ட போது கொல்கத்தா உயா்நீதிமன்றம் தலையிட்டு ஹிந்துக்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அழைத்து உத்தரவிட்டது. தொடா்ந்து, மேற்குவங்க ஆளுநா், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கண்டித்தது.

எனவே, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

வேளாண் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட கலாசாரப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டுத் தெரிவித்தது. காரைக்காலில் அமைந்துள்ள பண்டித ஜவாஹா... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க வலியுறுத்தல்

வெயில் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முக்கிய சாலைகளில் பசுமைப் பந்தல் அமைக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் நிா்வாக... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபத்துக்கு பூமி பூஜை

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மகா மண்டபம் கட்டுமானத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மூலவராக ஸ்ரீரங்கநாத பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் மிகப... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.பூவம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பலவாணன் (62). கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள் உள்ளனா். திங்கள்கிழமை சைக்கிளில் தனது வீட்டிலிர... மேலும் பார்க்க