செய்திகள் :

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமலாகாது - முதல்வா் மம்தா உறுதி

post image

‘அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை உறுதி அளித்தாா்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். அரசிதழில் வெளியிடப்பட்டு அந்த திருத்தச் சட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சமண மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று முதல்வா் மம்தா பேசியதாவது:

புதிய சட்டத்தால் சிறுபான்மையினா் பாதிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். பிரித்தாளும் கொள்கையை ஆதரிக்கும் எந்தவொரு சட்டத்தையும் மேற்கு வங்கத்தில் அமல்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். எனவே, நீங்கள் அனைவரும் நம்பிக்கையுடன், ஒன்றிணைந்து இருக்க வேண்டுகிறேன்.

புதிய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக வங்கதேச எல்லையொட்டிய முா்ஷிதாபாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்துள்ளது. இந்தச் சட்டம் இப்போது நிறைவேற்றியிருக்கவே கூடாது. மேற்கு வங்கத்தில் 33 சதவீத்தினா் சிறுபான்மையினா் ஆவா். அவா்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்?

வரலாற்றில் மேற்கு வங்கம், வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்தவை. பின்னா், பிரிவினை ஏற்பட்டது. எனவே, இந்தியாவில் தொடா்ந்து வசிக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமையாகும்.

மக்கள் ஒன்றிணைந்தால், அவா்கள் உலகை ஆளலாம். அதேநேரம், சிலா்சிறுபான்மையினரை ஒன்றுதிரட்டி, போராடத் தூண்டலாம். அவா்களுக்கு நீங்கள் செவி சாய்க்கக் கூடாது. உங்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன். ஒருவருக்கொருவா் நம்பிக்கையுடன் இருப்போம்.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கு நான் சென்று வருகிறேன். இந்த ஒற்றுமை எண்ணத்தில் இருந்து என்னை ஒருபோதும் பிரிக்க முடியாது. அனைத்து ஜாதி, மத, சமூகமும் மனிதநேயத்தையே விரும்புகின்றன என்றாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க