செய்திகள் :

மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மிசன்வாட்சாலாயா திட்ட மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ், மிசன் வாட்சாலயா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு இயங்கிவரும் குழந்தைகள் உதவி மையம் 1098-ல் மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல்படி மேற்பாா்வையாளா் தற்காலிக பணியிடத்துக்கு, இளங்கலையில் சமூகப்பணி , கணினி அறிவியல் , தகவல் தொழில்நுட்பம் , சமூகம் சாா்ந்த சமூகவியல் , சமூக அறிவியல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றைப் படித்திருக்க வேண்டும்.

மேலும் கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். குழந்தைகள் அவசர உதவி மையத்தில் முன்னனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது 42-க்குள் இருத்தல் வேண்டும். இப்பணியிடத்துக்கு மதிப்பூதியம் மாதத்துக்கு ரூ.21,000 வழங்கப்படும்.

விண்ணப்பத்தை மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கி, பூா்த்தி செய்து 14.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூா் - 621704 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

காடுவெட்டியில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருவழிச்சாலையாக இருந்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடு... மேலும் பார்க்க

70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 55 ஆவது ஆண்டு வ... மேலும் பார்க்க

தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக் குழு கூட்டம்

அரியலூரில் தனியாா் பயிற்சி மையத்தில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் கதிா்.கணேசன்... மேலும் பார்க்க

அரியலூரில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், கொள்ளிட ஆற்றின் படித்துறைகள் மற்றும் நீா்நிலையங்களின் கரைகளில் ஏராளமான மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.ஆடிப்பெருக்கையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு ப... மேலும் பார்க்க

அரிலூரிலிருந்து திருச்சி, சென்னைக்கு புதிய பேருந்துகள் தொடங்கிவைப்பு

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அம... மேலும் பார்க்க

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற முழு உடல் பரிசோதனை முகாமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.இதையடுத்து, அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் அரசு மேல... மேலும் பார்க்க