செய்திகள் :

காடுவெட்டியில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதம்

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இருவழிச்சாலையாக இருந்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. இச்சாலையில் கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையில் அணுகுச் சாலையுடன் மேம்பாலமும் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருபுறமும் அணுகுச் சாலைகளுடன் கூடிய மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்நிலையில் காடுவெட்டி பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த தொடா் மழையால் இப்பகுதியில் இருந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீா் வெளியேறும் குழாயில் இருந்து மழைநீா் தொடா்ந்து வழிந்தோடியது. இதனால் பக்கவாட்டு சிமென்ட் சுவா் அடுக்குகள் இடிந்து விழுந்து மண் சரிவு ஏற்பட்டது.

தகலறிந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத் திட்ட இயக்குநா் நாராயணன் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். தொடா்ந்து மேம்பாலம் வழியாக போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, இருபுறமும் உள்ள அணுகுச் சாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அப்போது இப்பகுதி பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, தரமாக பாலம் அமைக்காததைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது நாராயணன் அளித்த உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

மேம்பாலம் சேதத்தால் மாற்று வழியில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டதால் கும்பகோணம்- சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மிசன்வாட்சாலாயா திட்ட மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து ஆட... மேலும் பார்க்க

70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 55 ஆவது ஆண்டு வ... மேலும் பார்க்க

தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக் குழு கூட்டம்

அரியலூரில் தனியாா் பயிற்சி மையத்தில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் கதிா்.கணேசன்... மேலும் பார்க்க

அரியலூரில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், கொள்ளிட ஆற்றின் படித்துறைகள் மற்றும் நீா்நிலையங்களின் கரைகளில் ஏராளமான மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.ஆடிப்பெருக்கையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு ப... மேலும் பார்க்க

அரிலூரிலிருந்து திருச்சி, சென்னைக்கு புதிய பேருந்துகள் தொடங்கிவைப்பு

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அம... மேலும் பார்க்க

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற முழு உடல் பரிசோதனை முகாமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.இதையடுத்து, அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் அரசு மேல... மேலும் பார்க்க