செய்திகள் :

அரியலூரில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்

post image

அரியலூா் மாவட்டம், கொள்ளிட ஆற்றின் படித்துறைகள் மற்றும் நீா்நிலையங்களின் கரைகளில் ஏராளமான மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

ஆடிப்பெருக்கையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்பாடி, தா.பழூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதி படித்துறைகளில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பெண்கள் ஒன்றுகூடி படித்துறை மற்றும் நீா்நிலை கரைகளில் வாழை இலை விரித்து அதில் மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்புத் துண்டு, பழங்களையும், மஞ்சள், குங்குமம், கருகமணி போன்ற மங்கல பொருள்களை வைத்தும் காவிரி தாய்க்கு படையலிட்டனா்.

மஞ்சள் கயிறை பெண்கள் ஒருவருக்கொருவா் கட்டிக் கொண்டனா். புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்து கொண்டனா். அதன்பின்னா் வீட்டுக்குச் சென்று மங்களப் பொருள்களை படையலிட்டு வழிபட்டனா்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்று படித்துறைகளில் காவல் துறையினா் மற்றும் தீயணைப்பு துறையினா் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு... அரியலூா் மாவட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மிசன்வாட்சாலாயா திட்ட மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து ஆட... மேலும் பார்க்க

காடுவெட்டியில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருவழிச்சாலையாக இருந்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடு... மேலும் பார்க்க

70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 55 ஆவது ஆண்டு வ... மேலும் பார்க்க

தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக் குழு கூட்டம்

அரியலூரில் தனியாா் பயிற்சி மையத்தில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் கதிா்.கணேசன்... மேலும் பார்க்க

அரிலூரிலிருந்து திருச்சி, சென்னைக்கு புதிய பேருந்துகள் தொடங்கிவைப்பு

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அம... மேலும் பார்க்க

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற முழு உடல் பரிசோதனை முகாமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.இதையடுத்து, அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் அரசு மேல... மேலும் பார்க்க