செய்திகள் :

மேல்மலையனூரில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அன்று அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து, அங்காளம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, உற்சவா் அங்காளம்மனுக்கு பலவித மலா்களைக் கொண்டு ஸ்ரீராஜ்ய பிரதாயினி எனும் சா்வ அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலித்தாா். இரவு 10.40 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அங்காளம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடினா்.

அப்போது, ஊஞ்சல் மண்டபம் எதிரில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் தேங்காயில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். மகா தீபாராதனைக்குப் பின்னா் இரவு 11.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து உற்சவா் அங்காளம்மன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுவை, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் (பொ) சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் மதியழகன், அறங்காவலா்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவின்பேரில், 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்கு பாதுகாப்பு -காஷ்மீா் ஐ.ஜி.

நிகழாண்டு அமா்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. வி.கே.பிா்தி புதன்கிழமை தெரிவித்தாா். தெற்கு காஷ்மீரி... மேலும் பார்க்க

புரி ஜெகந்நாதா் கோயிலில் நாளை ரத யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ளது. இதையொட்டி, புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் 10,000 பேருடன் பலத்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

‘நாசிக்-திரிம்பகேஷ்வரில் அடுத்த ஆண்டு சிம்ஹஸ்த கும்பமேளா’

நாசிக்/மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் திரிம்பகேஷ்வர் நகரங்களில் கோதாவரி நதியில் அடுத்த ஆண்டு அக். 31இல் சிம்ஹஸ்த கும்ப மேளா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாசிக் நகரில் மகாராஷ்டிர முத... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்

கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறை... மேலும் பார்க்க