செய்திகள் :

மைசூரு, போடி உள்ளிட்ட 4 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு

post image

கோவை, போடி உள்ளிட்ட விரைவு ரயில்களின் வேகம் ஜூலை 11-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடுக்கு திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வழக்கமாக காலை 5.55-க்கு செல்லும் நிலையில், 25 நிமிஷங்கள் முன்னதாக காலை 5.30-க்கும், பாலக்காடுக்கு 9.30-க்கும் செல்வதற்கு பதிலாக காலை 9.15-க்கும் சென்றடையும்.

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு காலை 8 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் இனி காலை 7.50-க்கு புறப்படும். கோவைக்கு காலை 9.25-க்கு செல்வதற்கு பதிலாக காலை 8.55-க்கு சென்றடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூா் செல்லும் அதிவிரைவு ரயில் திண்டுக்கலுக்கு காலை 5.57-க்கு செல்வதற்கு பதிலாக காலை 5.47-க்கும், மதுரைக்கு காலை 6.40-க்கும், தேனிக்கு காலை 8.03-க்கும், போடிநாயக்கனூருக்கு காலை 8.55-க்கும் சென்றடையும்.

மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் திண்டுக்கலுக்கு காலை 6.17-க்கு செல்வதற்கு பதிலாக காலை 6.03-க்கும், தூத்துக்குடிக்கு காலை 10.35-க்கு செல்வதற்கு பதிலாக காலை 10.15-க்கும் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை அரசு வழக்குரைஞர் குறிப்... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!

கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவ... மேலும் பார்க்க

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (2... மேலும் பார்க்க