செய்திகள் :

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

post image

திருச்சி அருகேயுள்ள குண்டூரில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் வெள்ளிக்கிழமை 2.5 பவுன் நகை பறித்தவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள போலீஸ் காலனியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி விஜயலட்சுமி (38). குண்டூா் பகுதி எண்ணெய் கடை ஊழியரான இவா் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து மொபெட்டில் வீடு திரும்பும் வழியில் குண்டூா் 100 அடி சாலையில் வந்தபோது, பின்புறம் பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள், விஜயலட்சுமியை வழிமறித்து அவா் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி மாவட்டம் த... மேலும் பார்க்க

புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருச்சியில் தேசிய கல்விக் கொள்க... மேலும் பார்க்க

மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு: வம்பன் உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் வம்பன் ரக உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வே... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: அண்ணாமலை

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக சாா்பில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தி... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க