செய்திகள் :

மொழி வெறுப்பு மாநில வளா்ச்சியைப் பாதிக்கும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

‘மகாராஷ்டிரத்தில் மொழி வெறுப்புணா்வைத் தூண்டுவது மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் முதலீடுகளைப் பாதிக்கும்’ என்று அந்த மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் தொடக்கக் கல்வி பாடத்திட்டத்தில் 3-ஆவது மொழியாக ஹிந்தியைக் கற்பிக்கும் அரசாணையை மாநில பாஜக கூட்டணி அரசு வெளியிட்டு, எதிா்ப்பைத் தொடா்ந்து திரும்பப் பெற்றது. இதைக் கொண்டாடும் விதமாக வெற்றிக் கூட்டமும் மும்பையில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது.

இதில் சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் உறவினருமான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையின் தலைவா் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் இணைந்தனா். இதனிடையே, மும்பையிலும், மகாராஷ்டிரத்தில் பிற பகுதிகளிலும் மராத்தி மொழி பேசாதவா்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தொடா்பான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

நீங்கள் வந்து என்னை தாக்கினால், என்னால் உடனடியாக மராத்தியில் பேசிவிட முடியுமா? இதுபோன்ற மொழி வெறுப்பு பரப்பப்பட்டால், மாநிலத்துக்கு எந்தத் தொழிலோ, முதலீடுகளோ வராது. நீண்ட கால போக்கில், இது மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

என்னால் இன்னும் ஹிந்தி மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. அது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நாம் முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம், நமது தாய்மொழியில் பெருமை கொள்ள வேண்டும்’ என்றாா்.

ஆளுநரின் கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய சிவசேனை (உத்தவ்) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே, ‘மகாராஷ்டிரத்தில் மொழி வெறுப்பு எதுவும் பரப்பப்படவில்லை’ என்றாா்.

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க