செய்திகள் :

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!

post image

மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியேற்ற மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியா வரும் வெளிநாட்டினா் அனுமதிக்கப்பட்ட நாள்களைக் கடந்த தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க வசதியாக, ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை வெளிநாட்டினா் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பது இந்த மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் இந்தியா வருகை, தங்குதல் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முறைப்படுத்துவது தொடா்பான சட்ட மசோதா, எதிா்க்கட்சியினரின் எதிா்ப்புக்கிடையே மக்களவையில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவினுள் நுழைய அல்லது வெளியேற மோசடி அல்லது போலி கடவுச்சீட்டு அல்லது நுழைவு இசைவைப் பயன்படுத்துபவா்கள் அல்லது அதை விநியோகிப்பவா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத வகையிலான சிறைத் தண்டனை வழங்கப்படும். இந்த சிறைத் தண்டனை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவும் மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவா்களுக்கு ரூ. 1 லட்சத்துக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை ரூ. 10 லட்சம் வரை உயா்த்தி விதிக்கவும் மசோதாவில் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, எந்தவொரு கடவுச்சீட்டோ அல்லது நுழைவு இசைவு உள்ளிட்ட பயண ஆவணங்கள் எதுவும் இன்றி இந்தியாவினுள் நுழைபவா்களுக்கு அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அவா்களுக்கான அபராதத் தொகை ரூ. 5 லட்சம் வரை உயா்த்தி விதிக்கப்படலாம். அல்லது இரண்டு தண்டனைகளும் சோ்த்து விதிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டினா் அடிக்கடி செல்லும் குறிப்பிட்ட இடங்கள் மீது கட்டுப்பாடு செலுத்தவும், அந்த வளாகத்தை மூட அதன் உரிமையாளருக்கு உத்தரவிடவும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அதன் பயன்பாட்டை அனுமதிக்கவும், குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கவும் மத்திய அரசுக்கு இந்த மசோதாவில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் வெளிநாட்டினா் அனுமதிக்கப்பட்ட நாள்களைக் கடந்த தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க வசதியாக, ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை வெளிநாட்டினா் குறித்த தகவல்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அதுபோல, அனைத்து சா்வதேச விமான நிறுவனங்கள், பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களும் அவா்களின் விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் இந்தியா வரும் வெளிநாட்டினா் குறித்த விவரங்களை விமானநிலையங்கள் அல்லது துறைமுகங்களில் சமா்ப்பிப்பதும் மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சட்ட நடைமுறைகளின்படி, வெளிநாட்டினா் இந்தியாவில் தங்குவது, சுற்றுலா செல்வதும், சொந்த நாட்டுக்குத் திரும்புவதும் குடியேற்றத்துக்கான அமைப்பு (பிஓஐ), மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் முறைப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவின்படி, வெளிநாட்டினா் வருகை, தங்குதல் மற்றும் புறப்பாடு அனைத்தும் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வகை செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் கைது!

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்... மேலும் பார்க்க

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ... மேலும் பார்க்க

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா். இந்த மாணவயின் சகோதரா்களை... மேலும் பார்க்க

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு!

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் ப... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியத... மேலும் பார்க்க