செய்திகள் :

மோசமான வானிலை: மோரீஷஸ் விமானம் ரத்து

post image

மோரீஷஸ் நாட்டில் சூறைக்காற்று, புயலுடன் மோசமான வானிலை நிலவுவதால் அங்கிருந்து சென்னை வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.

மோரீஷஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு வாரந்தோறும் ‘ஏா் மோரீஷஸ்’ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மோரீஷஸ் நாட்டில் சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக சனிக்கிழமை அதிகாலை புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மறுமாா்க்கமாக சென்னையிலிருந்து சனிக்கிழமை அதிகாலை 3.55-க்கு புறப்பட வேண்டிய விமானமும் ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய ஊழியா்கள் அறிவித்தனா். இதனால், அந்த விமானத்துக்கு காத்திருந்த 277 பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை வந்துவிட்டு, பின்னா் சென்னையிலிருந்து மோரீஷஸ் சென்றடையும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சென்னை - மோரீஷஸ் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே பயணிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு கிடைக்காத பயணிகள் விமான நிலையத்துக்கு வந்துவிட்டனா். அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளோம் என்றனா்.

மோரீஷஸில் இருந்து சென்னை வரும் விமானத்தில் மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம் வையாபுரி பயணம் செய்வதாக இருந்த நிலையில் அவரின் பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க