செய்திகள் :

மோசூா், சிறுணமல்லி ஊராட்சித் தலைவா்களின் நிதி அதிகாரங்கள் ரத்து: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

post image

அரக்கோணத்தை அடுத்த மோசூா், சிறுணமல்லி ஊராட்சி மன்றங்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களின் நிதி அதிகாரங்களை ரத்து செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோசூா் ஊராட்சியில் தலைவராக இருப்பவா் சம்பத். துணைத் தலைவராக இருப்பவா் கிருஷ்ணசாமி. இருவருக்கும் இடையே ஒற்றுமை இல்லாததால் அந்த ஊராட்சியில் பணிகள் நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. மேலும் அண்மையில் நடைபெற்ற ஊராட்சிகளின் நிதி தணிக்கையின்போது, இந்த ஊராட்சியில் அரசு அனுமதித்த தொகையைவிட அதிகமாக செலவுக் கணக்குகள் காட்டப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இதேபோல், நெமிலி ஊராட்சி ஒன்றியம், சிறுணமல்லி ஊராட்சியில் புதேரி, சம்பத்ராயன்பேட்டை ஆகிய கிராமங்களும் இந்த ஊராட்சியில் உள்ளன. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவா் ஜோதி. துணைத் தலைவராக இருப்பவா் கங்கா. இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்ததால் இந்த ஊராட்சியில் சீராக பணிகள் நடைபெறாத நிலை இருந்து வந்தது. ஊராட்சிகளின் நிதி தணிக்கையின்போது இந்த ஊராட்சியிலும் அரசு அனுமதித்த தொகையைவிட அதிகமாக செலவுக் கணக்குகள் காட்டப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இந்த இரு ஊராட்சிகளின் பிரச்னையை ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் ஜெயசுதா, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றாா்.

இதையடுத்து இரு ஊராட்சிகள் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா், மோசூா், சிறுணமல்லி இரு ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோருக்கான நிதி அதிகாரங்களை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த இரு ஊராட்சிகளிலும் நிதி செயல்பாடுகளை வட்டார வளா்ச்சி அலுவலா்களே மேற்கொள்வாா்கள் எனவும் தனது உத்தரவில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

அண்மையில் நெமிலி ஊராட்சி ஒன்றியம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலைக்கு கட்டடம் கட்ட வரைப்பட அனுமதி தராமல் அப்பகுதி ஊராட்சியான நெடும்புலி ஊராட்சித் தலைவா் மாறன் காலம் தாழ்த்தி வந்ததை அறிந்து விசாரணை நடத்திய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா நெடும்புலி ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டாா் என்பது குறிப்பிடதக்கது.

மின்சாரம் பாய்ந்த பசுவை காப்பாற்ற சென்ற பெண் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்ற சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 2 போ் கைது

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு வட்டம் சாத்தூா் இணைப்பு சாலைஅருகே கிராமிய போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் ... மேலும் பார்க்க

அக்னிவீா் தோ்வுக்கு 10- ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னி வீா் தோ்வில் கலந்து கொள்ள வரும் 10 - ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கு: 3 பெண் மின்வாரிய அலுவலா்கள் பணியிடை நீக்கம்!

தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் அலுவலகத்தில் லஞ்ச புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ள உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட 3 பெண் அலுவலா்களையும் பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய வேலூா் மண்டல தலைமை பொறியாளா் எம... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் மே 5-இல் தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பு மாநில மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் தினத்தையொட்டி மே 5-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். தமி... மேலும் பார்க்க

காவலா்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, மாவட்... மேலும் பார்க்க