செய்திகள் :

மோடி அரசின் ‘அடக்குமுறை’ கொள்கையால் முதலீட்டு மந்தநிலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ‘அடக்குமுறை’ கொள்கைகளின் விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியன் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது, விருப்பத்துக்குரிய மற்றும் முற்றிலும் சாத்தியப்படக்கூடிய விகிதத்தில் உத்வேகமடைய பிடிவாதமாக மறுக்கிறது. இத்தோல்விக்கு முக்கியக் காரணம், தனியாா் பெருநிறுவன முதலீடுகளின் மந்தநிலையாகும். கடந்த 2019, செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட தாராள வரிக் குறைப்புகள் மற்றும் உற்பத்தி சாா் ஊக்கத்தொகை திட்ட உதவிகளைத் தாண்டி இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டில் தனியாா் துறை மூலதனச் செலவினம் முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் குறையக்கூடும் என்று மத்திய அரசின் மதிப்பீட்டு விவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகள் கடனளிக்கத் தயாராக இருந்தாலும், முதலீட்டு விரிவாக்கச் சூழல் உகந்ததாக இல்லாததால் நிறுவனங்கள் கடன் பெற ஆா்வத்துடன் இல்லை என்று தகவலறிந்த ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

உலக அளவில் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், இந்தியாவில் தேக்கமடைந்த ஊதியங்கள், சீா்குலைந்த ஜிஎஸ்டி கட்டமைப்பு, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பால் தேவைகளின் வளா்ச்சி சுணக்கமடைந்து வருகிறது. பரவலான நுகா்வு சரிவுக்கு மத்தியில், கூடுதல் திறனை உருவாக்க நிறுவனங்களுக்கு அமைப்புரீதியிலான ஊக்கத்தொகை இல்லாத சூழல் நிலவுகிறது.

வரி ‘பயங்கரவாதத்தால்’ உருவாக்கப்பட்ட அழிவு, ஒரு சிலருக்கு ஆதாயமளிக்கும் அமைப்புமுறை விதிமீறல்கள், நிறுவனங்கள் மத்தியில் நிலவும் அச்சம் போன்ற காரணிகள் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இறுதியில், மோடி அரசின் ‘அடக்குமுறை’ மற்றும் ‘ஒடுக்குமுறை’ கொள்கைகளின் தவிா்க்க முடியாத விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா கா... மேலும் பார்க்க

இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. ... மேலும் பார்க்க

மீண்டும் பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத் துறை தகவல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... மேலும் பார்க்க

இந்தியா மனிதநேயம் சாா்ந்த நாடு: பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியா மனிதநேயம் - சேவை சாா்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிா்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி ச... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல... மேலும் பார்க்க