செய்திகள் :

மோடி வருகை: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

post image

மணிப்பூரில் பிரதமர் மோடியின் வருகைக்கு இடையே, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் இன மோதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) மணிப்பூர் சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

மணிப்பூரின் சுராசந்த்பூரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, மணிப்பூரில் அமைதி நிலைநாட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி வருகிறார்.

பிரதமர் மோடியின் மணிப்பூர் வருகைக்கு நடுவே தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு முன்பாக கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

'பாஜக ஆட்சியின் கீழ் மணிப்பூர் எரிந்தது', 'வகுப்புவாத அரசியலை நிறுத்த வேண்டும்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

பேரணியாகச் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி இதுவரை வராதது ஏன்? என எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்வி எழுப்பி வருகின்றன.

Congress's massive protest as PM Modi visits state

இதையும் படிக்க | மணிப்பூர் அமைதிக்காக பாடுபடுவேன்! மோடி வாக்குறுதி!

நாள்கணக்கில் உலகப் பயணம்; மணிப்பூரில் 5 மணி நேரம்தான்! -காங். விமர்சனம்

மணிப்பூரில் 5 மணி நேரத்துக்கும் குறைவாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

மேதினிநகர்: ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், லாரியில் ரூ.12.72 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற போது அதை பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (செப்டம்பர... மேலும் பார்க்க

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ள... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க