செய்திகள் :

மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்

post image

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது விபத்து அல்ல; அப்பட்டமான கொலையே. இந்த சம்பவம் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்றது. இதனைக் கேட்டதும் உடலெல்லாம் நடுங்குகிறது.

தனது அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்தால், ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், இனி ஏழைகளின் உயிர்காக்கும் மருத்துவமனைகளாக இல்லை; அது பணக்காரர்களுக்கு மட்டுமே. அரசு மருத்துவமனைகள் மரணத்தின் குகைகளாக மாறிவிட்டன.

எப்போதும்போல, விசாரணை நடத்தப்படும் என்றுதான் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால் - புதிதாய் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக்கூட நீங்கள் உறுதிசெய்ய முடியாதபோது, அரசாங்கத்தை எப்படி நடத்துவீர்கள்? என்ன உரிமை இருக்கிறது?

பிரதமர் மோடியும், மத்திய பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையை உங்கள் அரசு பறித்துள்ள நிலையில், தற்போது தாய்மார்களின் மடியில் இருந்து குழந்தைகளும் பறிக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி அவர்களே, இன்று அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெற்றோர்களின் சார்பாக இந்தக் குரல் எழுப்பப்படுகிறது. உங்கள் பதில் என்ன?

இந்தப் போராட்டமானது, ஒவ்வொரு ஏழைக்கும் ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளுக்கானது என்று தெரிவித்துள்ளார்.

இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த 2 பச்சிளம் குழந்தைகளை ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய இருநாள்களின் நள்ளிரவில் ஒன்றன் பின் ஒன்றாக எலி கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இரு குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாள்களில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, தெலங்கானா ஆளுநருடன் சந்திப்பு!

ஒருநாள் பயணமாக சனிக்கிழமை ஹைதராபாத் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கு தெலங்கானா ஆளுநரை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு த... மேலும் பார்க்க

சிறுவன் உயிரிழப்பில் மா்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக் கொலை!

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மா்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரை கொலை செய்ததாக கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலா் அடித்துக்கொலை செய்தனா். மேலும், அ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் பிரதமா் மோடி சந்திப்பு

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு பிரதமா் நான்கு நாள் பயணம் மேற்க... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை தவிா்த்தாா் பிரதமா் மோடி! ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பில்லை!!

அமெரிக்காவில் இம்மாதம் நடைபெறும் ஐ.நா.பொதுச் சபை உயா்நிலை கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்று உரையாற்றுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்!

பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. தற்போதைய நடைமுறையில் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜ... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம்: பிரதமா் மன்னிப்புக் கேட்க வேண்டும்! காங்கிரஸ் வலியுறுத்தல்

மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம் மேற்கொள்வதற்காக, அந்த மாநில மக்களிடம் பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய் வலியுறுத்தினாா். ‘மணிப்பூரில் இன்னும் இயல்புந... மேலும் பார்க்க