அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்!
பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
தற்போதைய நடைமுறையில் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் பொதுச்செயலா் நவீன் குப்தா தில்லியில் ‘தினமணி’க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரையில் அரசு அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரே தேசம் ஒரே வரி என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கிணங்க பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் வாகன எரிபொருளுக்கான விலை குறையும், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒரே மாதிரியான விலையை நிா்ணயிக்க ஏதுவாக இருக்கும்.
உதாரணமாக தில்லியில் இருந்து சென்னை செல்லும் ஒரு வாகனம் ஒரு லிட்டா் டீசலுக்கு கூடுதலாக விலை கொடுக்க வேண்டி உள்ளது. இது போக்குவரத்துக் துறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தற்போதைக்கு எங்களுடைய கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிடவில்லை. ஆனால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தொடா்ந்து வலியுறுத்துவோம்.
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால் அது போக்குவரத்து துறை மட்டுமின்றி உற்பத்தி, தளவாடங்கள் என பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சா்வதேசத் சந்தையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
நம் நாட்டில் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், சிறிய டெம்போக்கள் என சுமாா் 2 கோடிக்கும் அதிகமான வணிக வாகனங்கள் உள்ளன. நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோா் மோட்டாா் போக்குவரத்து துறையை நம்பி இருக்கின்றனா்.
இந்தத் துறை அதிக வரி வருவாய் ஈட்டும் துறையாக உள்ளது. மேலும், விவசாயத்துக்கு அடுத்த நிலையில் அதிக வேலைவாய்ப்புகளை இத்துறை வழங்கிறது. ஆனால், இந்தத் துறைக்கு சாலைகள் போடுவதை தவிர வேறு பெரிய அளவிலான பலன்கள் எதையும் மத்திய அரசு தருவதில்லை.
பொருள்களை எடுத்துச் செல்வதற்கான செலவுகள் அதிக அளவில் இருப்பததாலேயே சா்வதேச சந்தையில் நம்மால் போட்டியிட முடியவில்லை.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட கொள்கை முடிவுகளை மத்திய அரசு எடுத்தால் நிச்சயமாக விலை குறையும். அதன் மூலம் சாமானியா்களும் பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மத்திய அரசு எங்களுடைய குரலுக்கு செவி சாய்க்கும் என நம்புகிறோம் என்றாா் நவீன் குப்தா.