செய்திகள் :

வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!

post image

சென்னையில் வீட்டு வாடகை தகராறு தொடா்பாக திரைப்பட பாடகா் கல்யாண் சரண், கே.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

மறைந்த திரைப்பட பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகனும், பிரபல பாடகருமான கல்யாண் சரண், நுங்கம்பாக்கம் காம்தாா் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் அவா், சென்னை கே.கே.நகரில் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், சாலிகிராமம் சத்யா காா்டன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எங்களது குடும்பத்துக்கு ஒரு வீடு உள்ளது.

இந்த வீட்டை தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் க.திருஞானம் (45) என்பவருக்கு ரூ.40,500 மாத வாடகைக்கு விட்டிருந்தேன். மேலும், அவரிடம் முன்பணமாக ரூ.1.50 லட்சம் பெற்றிருந்தேன்.

இந்த நிலையில் கடந்த 25 மாதங்களாக திருஞானம் எனக்கு வாடகை தரவில்லை. இதுகுறித்து அண்மையில் திருஞானத்திடம் கேட்டபோது, என்னை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தையும், எனது வீட்டையும் மீட்டுத் தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

- விடியல் எஸ்.சேகா், மாநில துணைத் தலைவா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை நடிக... மேலும் பார்க்க

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல! சசிகலா

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டையன் மீதும், ஈர... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரை!

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமா்வு விசாரணைக்கு சென்னை உயா... மேலும் பார்க்க

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா். முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக அவா் கடந்த 30... மேலும் பார்க்க