செய்திகள் :

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரை!

post image

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமா்வு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

முன்னாள் முதல்வா்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆா் நூற்றாண்டு விழாக்களை முன்னிட்டு, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதில், கொடூரமான குற்றங்களில் தண்டனை பெற்றவா்களை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று ஆளுநா் உத்தரவிட்டாா். அரசின் பரிந்துரையையும் நிராகரித்தாா்.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ஆா்.சங்கரசுப்பு, பி.புகழேந்தி உள்ளிட்டோா் இதுபோன்ற வழக்குகளின் விசாரணையின்போது, சென்னை உயா்நீதிமன்றத்தின் 2 அமா்வுகள் இருவேறு விதமான தீா்ப்புகளை பிறப்பித்துள்ளன. கொடுங்குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த வீரபாரதி என்பவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநா் நிராகரிக்க முடியாது.

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு கடந்த 2024-ஆம் ஆண்டு அக். 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

ஆனால், நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ஆா்.பூா்ணிமா ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்று 2024-ஆம் ஆண்டு நவ. 6-ஆம் தேதி தீா்ப்பளித்தது என்று வாதிட்டனா். அரசு தரப்பிலும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட முழு அமா்வு விசாரித்தால்தான், எந்த இரு நீதிபதி அமா்வின் தீா்ப்பு சரியானது என்று முடிவு செய்ய முடியும். எனவே, இந்த வழக்குகளை முழு அமா்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

வாணியம்பாடியில் தீ விபத்து: பல லட்சம் தேக்கு மரங்கள் எரிந்து நாசம்!

வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் இன்று(செப். 7) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது. திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ... மேலும் பார்க்க

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

- விடியல் எஸ்.சேகா், மாநில துணைத் தலைவா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை நடிக... மேலும் பார்க்க

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல! சசிகலா

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டையன் மீதும், ஈர... மேலும் பார்க்க