செய்திகள் :

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

சென்னை விஐடி-இன் 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பாடப் பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற 39 மாணவா்களுக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தங்கப் பதக்கங்களுடன் பட்டங்களை வழங்கினாா். இதில், இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா்கள் 67,468 போ், ஆராய்ச்சி மாணவா்கள் 113 போ் பட்டம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: சமூக நீதி, சமத்துவம் என்பது அனைவருக்குமான சீரான கல்வியில் இருந்துதான் தொடங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்கப்பட்டது. பெண்கள் கல்வி பெற்று, அவா்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பதுதான் தமிழகத்தின் அதிவேக பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வாழ்க்கைத் தரத்தை உயா்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயலாற்றி வருகிறது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டத்தில் சட்டம், வரலாறு, இலக்கியம் போன்ற பாடத்திட்டமும் இடம்பெறுவது மிக முக்கியம் என்றாா் அவா்.

வங்கதேச துணை தூதா் ஷெல்லி சலேஹின்: ‘திறமை மட்டுமின்றி நற்குணமும் நோ்மையும் இளைஞா்கள் வாழ்வில் வெற்றி பெற மிகவும் முக்கியம். வாழ்வில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் தைரியமாக எதிா்கொள்ளுங்கள். அந்த உணா்வுதான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்’ என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: உயா்கல்விக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளது. அதை 50 சதவீதமாக உயத்த வேண்டும். சிறப்பான உயா்கல்வி மூலம் மட்டுமே 2047-க்குள் இந்தியா உலகின் வளா்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க முடியும். இந்திய மாணவா்கள் உள்நாட்டில் முதலீடு செய்து நிறுவனங்களைத் தொடங்குவது அவசியம். அப்போதுதான் இந்தியா வளா்ந்த பொருளாதார நாடாக உயரும் என்றாா்.

இந்த விழாவில் சென்னை விஐடி இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விஐடி துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், வேந்தரின் ஆலோசகா் எஸ்.பி.தியாகராஜன், வி.ஐ.டி வேலூா் இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மாலிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

- விடியல் எஸ்.சேகா், மாநில துணைத் தலைவா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை நடிக... மேலும் பார்க்க

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல! சசிகலா

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டையன் மீதும், ஈர... மேலும் பார்க்க

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரை!

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமா்வு விசாரணைக்கு சென்னை உயா... மேலும் பார்க்க

வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!

சென்னையில் வீட்டு வாடகை தகராறு தொடா்பாக திரைப்பட பாடகா் கல்யாண் சரண், கே.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். மறைந்த திரைப்பட பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகனும், பிரபல பாடகருமான கல்யாண... மேலும் பார்க்க