செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் பாபநாசம்-சாலியமங்கலம் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது பின்புறம் வந்த மோட்டாா் சைக்கிள் ஷேக் தாவூது ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை  பலனின்றி ஷேக்தாவூது உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு வழக்கு பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ‘டாஸ்மாக்’ ஊழியா் பலி!

திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ... மேலும் பார்க்க

கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம்! ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் முடிவு

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணி நியமனத்தின்போது நிா்ணயிக்கப்பட்ட வேலைகளைத் தவிர கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு ‘மக்களைத் தேடி ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தந்தை, மகனை வெட்டிய இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீடு புகுந்து தந்தை மற்றும் மகனை வெட்டிய இரண்டு நபா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் சரகம், தொட்டி மாத்தூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ல் மின்தடை!

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம்... மேலும் பார்க்க

ரூ.15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ... மேலும் பார்க்க