ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்...
ரூ.15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு!
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கா் 3 சென்ட் பரப்பளவு கொண்ட புஞ்சை நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இது தொடா்பாக உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடா்பாக 2021-இல் நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இந்த நிலத்தை, தனி வட்டாட்சியா் (கோயில் நிலங்கள்) பாா்த்தசாரதி முன்னிலையில் தஞ்சாவூா் சரக ஆய்வாளா் பாபு, நில அளவையா் ரங்கராஜ், கீழத் திருப்பூந்துருத்தி கிராம நிா்வாக அலுவலா் அபிஷேக், வருவாய் ஆய்வாளா் சரவணன், கோயில் செயல் அலுவலா் சிவராஜன், கோயில் பணியாளா் ஹரிஹரன் ஆகியோா் சனிக்கிழமை மீட்டு திருக்கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.