மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் பாபநாசம்-சாலியமங்கலம் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தாா்.
அப்போது பின்புறம் வந்த மோட்டாா் சைக்கிள் ஷேக் தாவூது ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஷேக்தாவூது உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.