ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்...
கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!
கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் அந்தோணிசாமி முன்னிலை வகித்தாா். ஆலயத்தில் சிறப்பு ஆராதனை, திருப்பலி நடைபெற்றது. க.அன்பழகன் எம்எல்ஏ ஆயா், பிஷப் மற்றும் அருள் சகோதரிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்வில் திமுக ஒன்றிய செயலா் ஜெ.சுதாகா், முன்னாள் அதிமுக கவுன்சிலா் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆயா், பங்கு மக்கள் செய்திருந்தனா்.