செய்திகள் :

மோரீஷஸ் தேசிய தினத்தில் தலைமை விருந்தினா் மோடி

post image

போா்ட் லூயிஸ்: மோரீஷஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டாா்.

மோரீஷஸின் 57-ஆவது தேசிய தினம் புதன்கிழமை (மாா்ச் 12) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போா்ட் லூயிஸ் நகரில் கண்கவா் அணிவகுப்பு நடைபெற்றது. பிரதமா் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்று, அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.

இந்திய ஆயுதப் படை பிரிவும் அணிவகுப்பில் இடம்பெற்றது. இந்திய விமானப் படையின் ‘ஆகாய கங்கை’ குழுவினா், வான் சாகசத்தில் ஈடுபட்டனா். மோரீஷஸ் தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பன்முகத் தாக்குதல் திறன்கொண்ட ஐஎன்எஸ் இம்பால் போா்க் கப்பல் போா்ட் லூயிஸில் நங்கூரமிட்டுள்ளது.

உயரிய விருது வழங்கல்: தேசிய தின நிகழ்ச்சியில், பிரதமா் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய ‘தி கிராண்ட் கமாண்டா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி ஸ்டாா் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஸன்’ விருதை மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுல் வழங்கி கெளரவித்தாா்.

இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமா் மோடிக்கு இந்த விருது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இது, 140 கோடி இந்தியா்களுக்கும் கிடைத்த கெளரவம் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா். இந்தப் விருதை பெறும் முதல் இந்தியத் தலைவா் மோடி ஆவாா்.

மோரீஷஸ் தேசிய தினத்தில் தலைமை விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்றது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2015-இல் தேசிய தின நிகழ்ச்சியில் அவா் தலைமை விருந்தினராக கலந்துகொண்டாா். மோரீஷஸில் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா், அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டாா்.

பாஜக புகழாரம்: ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, 9 முஸ்லிம் நாடுகள் உள்பட 21 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்று, உலகின் தலைசிறந்த தலைவராக பிரதமா் மோடி உருவெடுத்துள்ளாா்; இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி புகழாரம் சூட்டியுள்ளாா்.

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்... மேலும் பார்க்க

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு ... மேலும் பார்க்க

மலையை தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை!

ஆந்திர மாநிலத்தில அமைந்துள்ள ருஷிகொணடா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: காவல்துறை கேட்டதால் நடிகைக்கு உதவி! விமான நிலைய அதிகாரி வாக்குமூலம்!

காவல்துறை கேட்டுக் கொண்டதால் நடிகை ரன்யா ராவை சோதனை செய்யாமல் விஐபி வழித்தடத்தில் செல்ல அனுமதித்ததாக விமான நிலைய அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவி... மேலும் பார்க்க

ரேவந்த் ரெட்டியுடன் திமுக தலைவர்கள் சந்திப்பு!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு த... மேலும் பார்க்க